districts

முடிச்சூர் சாலையில் லாரி மோதி மாணவர் பலி

தாம்பரம், ஜூலை 11- தாம்பரம் அடுத்த முடிச்சூர் ரோடு, விஷ்ணு நகர் பகுதியை சேர்ந்தவர் நாராயண மூர்த்தி. இவரது மகன் லட்சுமிபதி (வயது 16). மேற்கு தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். திங்களன்று (ஜூலை 11)  காலை லட்சுமிபதிவழக்கம் போல் பள்ளிக்கு முடிச்சூர் சாலை- மதுரவாயல் சாலை சந்திப்பு பகுதியில் தனது சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். அப்போது பின்னால் வந்த லாரி திடீரென  சைக்கிள் மீது மோதியது. இதில் லாரியின் சக்கரத்தில் சிக்கிய மாணவன் லட்சுமிபதி சம்பவ இடத்திலேயே பலியானார்.  இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் விபத்து ஏற்படுத்திய லாரியின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கினர். மேலும் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த தாம்பரம் போலீசார் பேச்சு நடத்தி அனைவரையும் கலைந்து போக செய்தனர்.