சிதம்பரம், மே 12- சிதம்பரம் நகரத்திற் குட்பட்ட அம்பேத்கர் நகரில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களது வீடுகள் நீர்வழி ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ளது எனக் கூறி பொதுப்பணி, காவல் மற்றும் வருவாய்த்துறையினர் ஜெசிபி எந்திரத்தைக் கொண்டு வீடுகளை இடித்த னர். தற்போது அரசு தேர்வு நடைபெற்று வரும் நிலையில், வேறு இடத்திற்கு சென்றால் பிள்ளைகளின் கல்வி பாதிக்கும் என்ப தால், பாதிக்கப்பட்ட மக்கள் அனைவரும் ஒன்று திரண்டு சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன் தலைமையில் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதனைய டுத்து, சிதம்பரம் வட்டாட்சி யர் ஹரிதாஸ், காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாற்று இடத்தில் வீடு கட்டி கொடுக்க வேண்டும் என்று அந்தப் பகுதி மக்கள் கோரிக்கை வைத்தனர்.