districts

img

சிபிசிஐடி காவலர்களிடம் ஸ்ரீமதி செல்போன் ஒப்படைப்பு

விழுப்புரம், ஜன.21- கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12ஆம் வகுப்பு படித்து வந்த கடலூர் பெரியநெசலூரை சேர்ந்த மாணவி ஸ்ரீமதி கடந்த ஆண்டு ஜூலை மாதம் 13ஆம் தேதி மர்ம மான முறையில் உயிரிழந்தார். இது குறித்து சின்னசேலம் காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் இந்த வழக்கு விழுப்புரம் சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, மாணவி ஸ்ரீமதி பயன்படுத்திய செல்போனை தங்களிடம் ஒப்படைக்கக்கோரி சிபிசிஐடி காவல் துறையினர் மாணவி யின் பெற்றோருக்கு பலமுறை சம்மன் அனுப்பினர். இருப்பினும் அவர்கள் செல்போனை ஒப்ப டைக்க மறுத்து வந்தனர். இத னால் விசாரணையை முடிப்பதில் தாமதம் ஏற்படுவதாக கூறி, சிபிசிஐடி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறை யிடப்பட்டது.

செல்போனை உடனே சி.பி.சி.ஐ.டி. வசம் ஒப்படைக்க வேண்டும் என அவரது பெற்றோருக்கு நீதி மன்றம் கடந்த 15.12.2022 அன்று உத்தரவிட்டிருந்தது. இந்த வழக்கு வரும் 1ஆம் தேதி மீண்டும் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. இந்நிலையில் செல்போனை ஒப்படைக்க ஸ்ரீமதியின் தாய் செல்வி, விழுப்புரம் தலைமை குற்ற வியல் நீதிமன்றத்திற்கு தனது வழக்கறிஞருடன் வந்தார். அவர், நீதிபதி புஷ்பராணி முன்னி லையில் ஆஜராகி, செல்போனை ஒப்படைத்தார். ஆனால் அந்த செல்போனை வாங்க மறுப்பு தெரி வித்த நீதிபதி புஷ்பராணி, இவ்வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தின் நேரடி விசாரணையில் இருப்பதால் செல்போனை வாங்க தனக்கு அதிகாரம் இல்லை என்றும், உயர்நீதிமன்றத்தின் உத்தர வில் உள்ளவாறு ஸ்ரீமதியின் செல்போனை சிபிசிஐடி விசாரணை அதிகாரியிடம் நேரடியாக ஒப்படைத்து அதற்கான ஒப்புகை சான்றை பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தினார். இதையடுத்து விழுப்புரம் வண்டிமேட்டில் உள்ள சிபிசிஐடி கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோமதியிடம் விழுப்புரம் நகர கிராம நிர்வாக அலுவலர் கார்த்தி முன்னிலையில் செல்போனை ஒப்படைத்தார். பின்னர் செல்போன் ஒப்படைக்கப்பட்டதற்கான ஒப்புகைச்சீட்டை பெற்றுக் கொண்டார்.