வாணியம்பாடி, ஜன. 29- வாணியம்பாடியில் ரூ.6 லட்சம் மதிப்பிலான நகைகளை பறக்கும்படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகை கடை பஜாருக்கு குடியாத்தம் பகுதியில் இருந்து இருசக்கர வாகனத்தில் கணேஷ் என்பவர் உரிய ஆவனம் இன்றி எடுத்து வந்த சுமார் ரூ.6 லட்சம் மதிப்பிலான 18 சவரன் தங்க நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட நகைகளை வாணியம்பாடி நகராட்சி தேர்தல் அலுவலரும் ஆணைருமான ஸ்டாலின்பாபுவிடம் ஒப்படைத்தனர். அதேபோல், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் புறவழிச்சாலை பகுதியில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் சீனிவாசன் தலைமையில் அதிகாரிகள் தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்டதில், உமராபாத் பகுதியைச் சேர்ந்த சத்தியமூர்த்தி என்பவர் 1 லட்சத்து 23 ஆயிரம் ரூபாயை உரிய ஆவணமின்றி எடுத்துச் செல்வது தெரிய வந்தது. இதையடுத்து அந்த பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து ஆம்பூர் தேர்தல் நடத்தும் அலுவலர் ஷகிலாவிடம் ஒப்படைத்தனர்.