districts

போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத் தொகை அதிகரிப்பை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு

சென்னை, நவ.7-  போக்குவரத்து விதிமீறலுக்கு விதிக்கப்படும்  அபராத தொகையை  உயர்த்தப்பட்டதை ரத்து செய்யக்கோரி சென்னை உயர்நீதி  மன்றத்தில் மனுதாக்கல் செய்யப் பட்டுள்ளது. சாலை போக்குவரத்து விதிமீற லுக்கான அபராதத் தொகையை மத்திய அரசு அண்மையில் பலமடங்கு உயர்த்தியது.  இதையடுத்து தமிழ கத்தில் போக்குவரத்து விதிமீறலுக் கான இந்த புதிய அபராத தொகை வசூலிப்பு தொடர்பாக கடந்த மாதம்  தமிழக அரசு அரசாணை வெளி யிட்டது. அதன்படி ஓட்டுநர் உரிமம்  இல்லாமல் வாகனத்தை ஓட்டினா லும் ரூ.5 ஆயிரமும், பாதுகாப்பு பெல்ட் அணியாமல் வாகனத்தை ஓட்டு பவருக்கும், அதில் பயணிப்பவருக்கும் ஆயிரம் ரூபாயும், ஹெல்மெட் அணி யாமல் செல்பவர் மற்றும் அவர் பின்னால் ஹெல்மட் அணியால் இருப் பவருக்கும் ஆயிரம் ரூபாய் அபராதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்களுக்க வழிவிடாமல் சென்றால் ரூ.10 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.  இதனால் வாகன ஓட்டிகள் கடும்  அதிருப்தி அடைந்துள்ளனர். இந்நிலையில், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தை அதிகரித்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யக்கோரி  மதுரையைச் சேர்ந்த ஜலாலுதீன்  என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.   அவர் தனது மனுவில் கூறியிருப் பதாவது:- போக்குவரத்து விதிமீறல்க ளுக்கான அபராதத்தை பல மடங்கு அதிகரித்ததன் மூலம் தினக் கூலிகள், ஆட்டோ ஓட்டுநர்கள், பிற  பயணிகள் கடுமையாக பாதிக்கப்படு வார்கள். சாலைகளின் நிலைமை, போக்குவரத்து நெரிசல், கவனக் குறைவுடன் வாகனம் இயக்குவது, குடி போதையில் வாகனம் இயக்குவது ஆகியவை சாலை விபத்துக்கு முக்கிய காரணியாக இருந்தபோதிலும், அபராத தொகை அதிகரித்துள்ளதன் மூலமாக காவல்துறையினர் அப்பாவி மக்களை துன்புறுத்துவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. அபராத தொகையை உயர்த்தும் முன் பொது மக்களுக்கு அரசு முறையான சாலையை ஏற்படுத்தி கொடுத்திருக்க வேண்டும். இவ்வாறு அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.  இந்த வழக்கு,  பொறுப்பு தலைமை நீதிபதி ராஜா மற்றும் நீதிபதி கிருஷ்ணகுமார் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில்  அவகாசம் கேட்கப்பட்டது. இதை யடுத்து, வழக்கின் விசாரணை தள்ளி வைக்கப்பட்டுள்ளது.