மதுராந்தகம், ஏப். 2–- நெல் கொள்முதல் நிறுத் தப்பட்டதையடுத்து, விவ சாயிகள் பேருந்தை சிறை பிடித்து போராட்டம் நடத்தி னர். செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அடுத்த திம்மாவரம் கிராமத்தில் 500 ஏக்கருக்கு மேல் நெல் அறுவடை செய்து களத்தில் கொட்டி வைத்துள்ளனர். இந்த நெல்லை கொள்முதல் செய்திட 7 நாட்களுக்கு முன்பு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் திறக்கப்பட்டது. விவசாயிகளிடமிருந்து இரண்டு நாட்களாக நெல் கொள்முதல் செய்யப்பட்ட நிலையில், திடீரென்று ஆன்லைன் பதிவு நிறுத்தப் பட்டதாக கூறப்படுகின்றது. இதனால் விவசாயிகள் எலப்பாக்கம் - அச்சரப் பாக்கம் செல்லும் சாலை யில் அரசு பேருந்தை சிறை பிடித்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அங்கு வந்த காவல்துறையினர் ஓரிரு நாட்களில் சரி செய்யப்படும் என உறுதி அளித்தனர். இதனையடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.