பொன்னேரி ஏப். 10 - பொன்னேரி அருகே ரூ.60 கோடி மதிப்புள்ள விவசாய நிலத்தை அரசு அதிகாரிகள் ஆய்வு செய்து மீட்டனர். சென்னை- கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையில் பொன்னேரி அடுத்த பஞ்செட்டி ஊராட்சிக்கு சொந்தமான 20 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தில் சிலர் விவசாயம் செய்து வந்தனர். இது தொடர்பாக வந்த புகார் அடுத்து பொன்னேரி வட்டாட்சியர் ரஜினிகாந்த் தலைமையிலான வருவாய் துறையினர் பயிர்களை அகற்றி நிலத்தை மீட்டனர்.