சென்னை, ஏப். 6 - காவலர்களை மிரட்டியவர்களின் முன்ஜாமின் மனுக்களை சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. ராயபுரம் பகுதி, 51ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் நிரஞ்சனாவின் கணவர் ஜெகதீசன் அவரது நண்பர்கள் சாலையின் குறுக்கே வாகனங்களை நிறுத்தி விட்டு பேசிக் கொண்டிருந்தனர். அப்போது இரவு நேர ரோந்து வந்த காவலர்களை மிரட்டியுள்ளனர். இந்த வழக்கில் முன் ஜாமீன் கோரிய ஜெகதீசன் உள்ளிட்ட நால்வரின் மனுகளை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.