சென்னை, ஜூலை 5- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் தலைமை யகம் தற்போது கோயம் பேட்டில் செயல்பட்டு வருகி றது. இந்த அலுவலகத்தில் போதிய இடவசதி இல்லை. எனவே சென்னை நந்தனம்-அண்ணாசாலை தேவர் சிலை அருகே பிரமாண்டமான வகை யில் மெட்ரோ ரயில் நிலைய தலைமை அலுவலகம் அமைக்க கடந்த பல ஆண்டுகளுக்கு முன் திட்டமிடப்பட்டது. இந்த புதிய அலுவலகம் 3.90 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.365 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. 95விழுக்காடு பணிகள் முடிந்துவிட்டன ‘சி.எம்.ஆர்.எல். பவன்’ என்ற பெயரில் அமைந்துள்ள இக்கட்டிடம், 12 மாடிகளை கொண்டது. அதன் அருகே தலா 6 மாடிக ளுடன் 2 கட்டிடங்களும் கட்டப்பட்டுள்ளன. 6 மாடி கட்டிடத்தில் மெட்ரோ ரெயில் அதிகாரி களுக்கான குடியிருப்புகள் மற்றும் தனியார் வர்த்தக நிறுவனங்களுக்கு கட்டிடம் வாடகைக்கு விடப்பட உள்ளது. தற்போது இந்த பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. அதை தொடர்ந்து 12 மாடி பிரமாண்ட கட்டிடம் விரை வில் பயன்பாட்டுக்கு வர உள்ளது என மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.