சென்னை, ஜூன் 1 - டிடிகே நிறுவனத்திலிருந்து 250க்கும் மேற்பட்ட மருந்து விற்பனை பிரதிநிதிகள் சட்ட விரோதமாக பணிநீக்கம் செய்யப்பட் டுள்ளதைக் கண்டித்து அந்நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னையில் டிடிகே ஹெல்த்கேர் நிறுவனத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் பணியாற்றுகின்றனர். இந்த நிறுவனத்தின் ஒரு பகுதியாக உள்ள `ஹியூமன் பார்மா பிரிவை, பிஎஸ்வி என்ற நிறுவனம் வாங்கி யுள்ளது. `ஹியூமன் பார்மா பிரிவில் பணி யாற்றி வரும் 250க்கும் மேற்பட்ட மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகளை தனது நிறுவனத்தில் தொடர் பணியில் அமர்த்த பிஎஸ்வி நிறுவனம் விரும்பவில்லை. எனவே, `ஹியூமன் பார்மா பிரிவில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஊழியர்களை டிடிகே நிறுவனம் பணி நீக்கம் செய்துள்ளது. சட்டத்திற்கு புறம்பாக நடைபெற்றுள்ள இந்த ஆட்சிக்குறைப்பை எதிர்த்து அகில இந்திய மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனம் (எப்எம்ஆர்ஏஐ) தமிழக அரசிடம் புகார் அளித்தது. அதன்பேரில் தொழிலாளர் நலத் துறை விசாரணை நடத்த உத்தரவிடப் பட்டுள்ளது. இந்நிலையில், நிர்வாகத்தின் தொழிலா ளர் விரோத நடவடிக்கையை கண்டித்து மே 31, ஜூன் 1 ஆகிய தேதிகளில் பல்லா வரத்தில் உள்ள அந்த நிறுவனத்தின் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.ரமேஷ் சுந்தர் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் சிஐடியு மாநில துணைப்பொதுச் செயலா ளர் எஸ்.கண்ணன், தமிழ்நாடு மருந்து மற்றும் விற்பனை பிரதிநிதிகள் சங்கத்தின் தலைவர் சத்தியநாராயணன், பொதுச்செயலாளர் பிரபாகர் தேவதாஸ் உள்ளிட்டோர் பேசினர்.