districts

img

கொரோனாவில் இருந்து குணமடைந்த 1 லட்சம் பேருக்கு மருத்துவ ஆலோசனை

சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னை, ஆக. 8- கொரோனா தொற்றால் பாதிக்  கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு  திரும்பிய சுமார் 1 லட்சம் நபர்க ளுக்கு மாநகராட்சியின் சார்பில் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலொசனைகள் வழங்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் உத்தரவின்படி, பெருநகர சென்னை மாநகராட்சிக் குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று தடுப்பு மற்றும் பாது காப்பு தொடர்பாக பல்வேறு நடவ டிக்கைகள் சிறப்பான முறையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நகராட்சி நிர்வாகத்துறை அமைச்  சர் கே.என்.நேரு கடந்த ஜூன் 12 ந்தேதி அன்று கொரோனா நோயால்  பாதிக்கப்பட்டு குணமடைந்து சிகிச் சைக்கு பின் வீடு திரும்பியவர்களை கண்காணிக்க பெருநகர சென்னை மாநகராட்சியின் சார்பில் தொலை பேசி ஆலொசனை வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின்படி, கொரோனா  வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு  சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர் களை தொலைபேசியில் தொடர்பு  கொண்டு அவர்களுக்கு தேவை யான தகவல்களை வழங்க மருத்து வர்கள் மற்றும் சென்னை தன்னார்வ லர்கள் என்ற தொண்டு நிறுவ னத்தின் சார்பில் சுமார் 150 பயிற்சி  பெற்ற தொலைபேசி அழைப்பா ளர்கள் கொண்ட குழுக்கள் ஏற்படுத்தப்பட்டன.

இந்தப் பயிற்சி அளிக்கப்பட்ட தொலைபேசி அழைப்  பாளர்கள் மூலம் கொரோனா தொற்று  பாதிக்கப்பட்டு வீடு திரும்பிய நபர்களை தொடர்பு கொண்டு தலை வலி, உடல் வலி, உடல் சோர்வு, தூக்க மின்மை, இருமல், சுவாசப் பிரச்சினை கள் உள்ளிட்ட ஏதேனும் அறிகுறிகள் உள்ளதா என்பதை தெரிந்து கொண்டு, அறிகுறிகள் இருந்த நபர்  களுக்கு தொடர்பு மைய தொலை பேசி வழியாக மருத்துவ ஆலோ சனைகள் வழங்கப்பட்டு வந்தது. மேலும், உளவியல் ஆலோ சனைகள் தேவைப்படுவோருக்கு தொலைபேசி வழியாக மனநல மருத்துவர்களின் மூலம் ஆலோ சனை வழங்கப்பட்டது. உணவு தொடர்பாக சந்தேகங்களுக்கு உணவியல் நிபுணர்கள் மூலம் ஆரோக்கியம் மற்றும் சத்தான உணவுகள் குறித்த ஐயங்களும் தீர்த்து வைக்கப்பட்டது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி யவர்களுக்கான தொலைபேசி மூலம் கண்காணிக்கும் திட்டத்தின் மூலம் இதுவரை 1 லட்சத்து 29 ஆயி ரத்து 712 நபர்களை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு மருத்துவ ஆலொசனைகள் வழங்கப்பட்டது.

இதில் ஒருசில நோய் அறிகுறிகளுடன் இருந்த 5,874  நபர்களுக்கு ஏனைஆநன செயலி மற்றும் வாட்ஸ் ஆப் ஆகியவற்றில் வீடியோ அழைப்பின் மூலம் மருத்து வர்களால் மருத்துவ ஆலொசனை இலவசமாக அளிக்கப்பட்டது. மேல்சிகிச்சை தேவைப்பட்ட நபர்கள் மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டனர். இதில்  குறிப்பாக உயர்ரத்த அழுத்தம், நீரி ழிவு நோய் மற்றும் காசநோய் உள்ள  நபர்களின் இருப்பிடத்திற்கு மருத்து வர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நேரடியாக சென்று அவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகளை வழங்கியுள்ளனர். சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குண மடைந்து சிகிச்சைக்கு பின் வீடு திரும்பியவர்களை கண்காணிக்க அமைக்கப்பட்ட தொலைபேசி ஆலோ சனை மையத்தில் பணிபுரிய 150 பயிற்சி பெற்ற தொலைபேசி அழைப்  பாளர்களை வழங்கிய சென்னை தன்னார்வலர்கள் தொண்டு நிறுவ னத்தின் நிறுவனர் ரிங்கு மெச்சேரியை  பாராட்டி ரிப்பன் கட்டடத்தில் சான்றி தழை வழங்கினார். இந்நிகழ்ச்சியின் போது, உதவி ஆணையாளர் பி.பெர்மிவித்யா, சென்னை தன்னார்வத் தொண்டு நிறுவனப் பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.