districts

img

கொடுங்கையூர் குப்பை கிடங்கு தீ அணைப்பு

சென்னை, மே 21 - சென்னை கொடுங்கை யூர் குப்பை கிடங்கில் மாநகரப்பகுதிகளில் சேகரிப்படும் குப்பைகள் வெள்ளியன்று பிற்பகல் தீப்பிடித்து எரிந்தது. குப்பை கிடங்கில் பின் பகுதியில் தீ எரிந்ததால் பெரிய அளவில் தாக்கம் ஏற்படவில்லை. சில மணி நேரத்தில் சுற்றுப்பகுதி முழு வதும் புகை மூட்டமாக மாறியது. இதுபற்றி உடனடி யாக தீயணைப்பு நிலை யத்திற்கு தகவல் தெரிவிக் கப்பட்டு தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்தன. வியாசர்பாடி, சத்திய மூர்த்தி நகர், கொருக்குப் பேட்டை, மாதவரம், பெரம் பூர் செபியம் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து 15  வாகனங்கள் குப்பை கிடங்கிற்கு சென்று தீ பிடித்து எரிந்த பகுதியில் தண்ணீரை அடித்து தீ பரவாமல் தடுக்கப்பட்டது. தீப்பிடித்து புகை மண்டலமாக காட்சியளித்த அந்த பகுதியை மேயர் பிரியா,  துணை மேயர் மகேஷ் குமார்,  ஆர்.டி.சேகர், மண்டல தலைவர் நேதாஜி கணேசன் மற்றும் அதிகாரிகள் பார்வையிட்டனர். குப்பை கிடங்கில் இருந்து புகை வெளியேறா மல் தடுக்க தீயணைப்பு வண்டிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்ட ட்ரிப் தண்ணீர் கொண்டு வரப்பட்டு அணைக்கப்பட்டது. ஆனா லும் குப்பை கிடங்கை ஒட்டிய பகுதியான எழில்நகர், கொருக்குப்பேட்டை, வியாசர்பாடி பகுதிகளில் புகை மூட்டமாக காணப் பட்டது. தொடர்ந்து தண்ணீர் பீய்ச்சி அடித்ததால் குப்பை கிடங்கில் இருந்து  வெளியேறிய புகை  படிப்படியாக கட்டுப்படுத்தப் பட்டது.