சென்னை,மார்ச்.20- 8 மணி நேரமாக வேலை நேரத்தை குறைக்க வலியுறுத்தி ஜூமோட்டோ ஊழியர்கள் சென்னை மாவட்டஆட்சியர் அலுவலகம் முன்பு ஞாயிறன்று (மார்ச் 20) ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஜூமோட்டோ நிறுவனத்தில் தற்போது நடைமுறைபடுத்தப்பட்ட ஜிஐஜி முறையால் பழைய ரேட் கார்டு மாற்றப்பட்டுள்ளது. ஒரு ஊழியர் 4 கி.மீ எல்லைக்குள் டெலிவரி செய்த நிலை மாறி, தற்போது 18 கி.மீ என விரிவாக்கம் செய்துள்ளது. ஆனாலும் 4 கி.மீட்டருக்கு கொடுத்த அதே கட்டணத்தையே வழங்குகிறது. இதற்காக 18 மணி நேரம் வேலை செய்கின்றனர். இரவு நேரத்தில் கூட பெண் ஊழியர்கள் வேலைக்கு வரவேண்டிய அவலம் நீடிக்கிறது. ஜிக் முறை கூடாது என்றும் பழைய ரேட் கார்டு வேண்டும் என்பதும் ஜூ மோட்டோ நிறுவனத்தில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள எம்.ஐ.என்.ஜி (மிங்) முறையையே அமல்படுத்த வேண்டும் என்பதும் ஊழியர்களின் கோரிக்கையாகும். ஜூமோட்டோ நிறுவனத்தின் ஊழி யர் விரோதப்போக்கை கண்டித்து நடை பெற்ற இந்த போராட்டத்திற்கு தலைமை தாங்கி உரையாற்றிய சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன்,“ கொரோனா பொது முடக்கத்தில் ஊரே அடங்கி இருந்தபோது இரவு-பகலாக அச்சமின்றி உணவு விநி யோகம் செய்தவர்கள் ஜூமோட்டோ ஊழியர்கள். அவர்களது வயிற்றில் அடிக்கும் ஜூமோட்டோ நிறுவனத்தின் தொழிலாளர் விரோத போக்கை இனியும் அனுமதிக்க முடியாது”என்றார். வேலை நேரத்தை 8 மணி நேர மாக குறைக்கவும், இஎஸ்ஐ, பிஎப் உள்ளிட்ட சட்ட சலுகைகள் கிடைக்க வும் போராடும் ஜூமோட்டோ ஊழி யர்களின் போராட்டத்திற்கு சிஐடியு துணை நிற்கும் என்றும் இந்த பிரச்சனையில் தமிழக அரசு தலையிட்டு உரிய தீர்வு காண முன்வரவேண்டும் என்றும் சவுந்தரராசன் வலியுறுத்தினார். நூற்றுக்கணக்கானோர் பங்கேற்ற இந்த போராட்டத்தில் மாநில செய லாளர் கோபிகுமார், மத்திய சென்னை மாவட்ட செயலாளர் சி.திருவேட்டை, வடசென்னை மாவட்ட செயலாளர். ஆர்.ஜெயராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.