சென்னை, ஏப். 11- சென்னை கொடுங்கையூரில் புதிதாக இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் அடக்கஸ்தலம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதை தமிழ்நாடு சிறு பான்மை மக்கள் நலக்குழு வரவேற்றுள்ளது. இதுகுறித்து மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, மாநில பொதுச் செயலாளர் எம்.ராமகிருஷ்ணன் ஆகி யோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்மையில் நடைபெற்ற சென்னை பெருநகர மாநகராட்சியின் மாமன்ற கூட்டத்தில் கொடுங்கையூரில் அரசுக்கு சொந்தமான இடத்தில் இந்துக்கள், இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்களுக்கு என மூன்று மயானங்கள் அமைக்க முடிவெடுத்துள்ளதை சிறுபான்மை மக்கள் நலக்குழு வரவேற்கிறது. பெருகி வரும் சென்னை மாநகராட்சி யின் மக்கள் தொகைக்கேற்ப பல்வேறு மதப் பிரிவுகளை சார்ந்தவர்களுக்கு அடக்கஸ்தலத்திற்காக அரசு இடம் ஒதுக்கித் தர வேண்டும் என்ற கோரிக்கை சிறுபான்மை மக்கள் நலக்குழு சார்பில் 2018ஆம் ஆண்டு துவக்கத்தில் இருந்து தமிழக அரசுக்கு, ஆட்சியர், மாநகராட்சி, தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நல ஆணையம் ஆகியவற்றிடம் தொடர்ந்து வைக்கப்பட்டன. சென்னை - மயிலை மறைமாவட்ட நிர்வாகமும் தொடர்ந்து முயற்சி எடுத்தது. சிறுபான்மை மக்கள் நலக்குழு தொடர்ந்து இக்கோரிக்கைகளுக்காக இயக்கங்களை முன்னெடுத்தது. மக்களின் நீண்டகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசிற்கும், தமிழக முதல்வருக்கும், சென்னை பெருநகர மாநகராட்சி நிர்வாகத்திற் கும், இதற்காக பல்வேறு கட்டங்களில் குரல் கொடுத்த சட்டமன்ற, மக்களவை உறுப்பினர்களுக்கும், பங்குத் தந்தைக ளுக்கும், சிறுபான்மை நல ஆணையத் திற்கும், மக்கள் சார்பில் நன்றி தெரி வித்துக் கொள்கிறோம். அதேபோல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில், பகுதிகளில் முன்னுக்கு வருகின்ற இதுபோன்ற கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசும், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் ஆணையமும், உள்ளாட்சி நிர்வாகங்க ளும் முன்வரவேண்டும் என கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.