சென்னை, பிப். 26 - ஆலந்தூர், பெருங்குடி மண்டலங்களில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 121 கிலோ மீட்டர் நீளத்திற்கு ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. கோவளம் வடிநில பகுதியில் உள்ள, பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட ஆலந்தூர், பெருங்குடி மற்றும் சோழிங்கநல்லூர் மண்டலங்களில் ஒருங்கிணைந்த மழை நீர் வடிகால் அமைக்க திட்ட மிடப்பட்டது. இதன்படி கே.எப்.டபிள்யூ. என்ற ெஜர்மன் நாட்டு வங்கி நிதியுதவியுடன் 1714 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 300 கி.மீ. நீளத்திற்கு மழை நீர் வடிகால் அமைக்கப்படுகிறது. முதற்கட்டமாக, ஆலந்தூர் மண்டலம் மற்றும் பெருங்குடி மண்ட லத்திற்குட்பட்ட நங்கநல்லூர் முதல் பிரதான சாலை, 6வது பிரதான சாலை, இந்து காலனி, கண்ணன் காலனி, ராம் நகர், சீனிவாச நகர், குபேரன் நகர், எல்.ஐ.சி நகர் ஆகிய பகுதி களில் மூன்று சிப்பங்களாக 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 40 கிலோ மீட்டர் நீளத்திற்கு மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ஆலந்தூர் மற்றும் பெருங்குடி மண்ட லத்திற்குட்பட்ட புவனேஸ்வரி நகர், பாலாஜி நகர், ராதா நகர், மடிப்பாக்கம், அன்னை சத்யா நகர், லட்சுமி நகர், குபேரன் நகர், சோழிங்கநல்லூர் மண்டலத்திற்குட்பட்ட எம்.சி.என் நகர், விஜிபி அவென்யூ, சந்திரசேகர் அவென்யூ, ஜவஹர் நகர் ஆகிய பகுதிகளில் 447 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சுமார் 121 கி.மீ நீளத்திற்கு வடிகால் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்ததாரர்களுக்கு பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. இப்பணிகள் 24 மாதங்களில் முடிக்கப்படும். மாநகராட்சி செய்தி குறிப்பில் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.