விழுப்புரம், நவ. 5- உரிமைக்கான போராட்டத்தை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடு ப்போம் என்றும் பாலின நிகர் நிலை பயிற்சியை எல்லா தளத்திலும் கொண்டு செல்ல வேண்டும் என்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் உ.வாசுகி தெரிவித்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் “இன்றைய அரசியலும் திருநர் சமூக பிரச்சனைகளும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி விழுப்புரத்தில் சனிக்கிழமை (நவ. 5) நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு தலைமை தாங்கினார். கட்சியின் மத்திய குழு உறுப்பினர் பி.சம்பத் திருநர் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். மத்தியக் குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகை யில், நீங்கள் கோர்வையாக முன் வைத்துள்ள கோரிக்கைகளை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். பாலின நிகர் நிலை பயிற்சியை எல்லா தளத்திலும் கொண்டு செல்ல வேண்டும், நிகர்நிலைப் பயிற்சி ஆண் பெண்ணோடு நிறுத்திக் கொள்ளாமல், மாறிய பாலினம் பயிற்சியாக கொண்டு செல்ல வேண்டும். மாறிய பாலினத்தை நூற்றுக்கு 99 விழுக்காட் டினர் குடும்பத்தினரால் கைவிடுடப் படுகின்றனர். இவர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைப்பதில் பிரச்சனை உள்ளது. எங்கு சென்றாலும் முகம் தெரியாதவர்கள் கேலி கிண்டல் செய்யும் நிலை உள்ளது. சில காவல் துறையினரின் நடவ டிக்கைகளும் மோசமாக உள்ளது. காவல் துறையினரும், அரசு அதிகாரி களும், பொதுமக்களும் இவர்களை கனிவோடு பார்க்க வேண்டும் என்றார். நமக்கு கண்ணியமான வாழ்க்கை வாழ் வதற்கு ஒரு அழுத்தம் இருக்கிறது. மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை காப்பீடு திட்டத்தில் செய்யும் போது தனியார் மருத்துவமனையிலும் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளீர்கள். அதனை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வோம். சமத்துவ சமூகம் படைக்க வேண்டும் என கட்சி போராடி வரு கிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்டவர்க ளுக்கும் சம உரிமை உண்டு என்று நிரூபித்து காட்டிய வரலாறு கம்யூனிஸ்ட் கட்சிக்கு உள்ளது. தலித், பழங்குடியின மக்கள் என அனைத்து பாதிக்கப்பட்டவர்களுக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உங்களுக்காக குரல் கொடுக்கும், போராடும். உரிமைக்கான போராட் டத்தை அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுப்போம் என்றார்.