districts

img

எலும்பு அடர்த்தி  இலவச பரிசோதனை

சென்னை, ஜூன் 30- சென்னை குரோம்பேட்டையில் உள்ள பார்வதி மருத்து வமனையில் ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் எலும்பு அடர்த்தி தொடர்பான நோய்களைக் கண்டறிய உதவும்  டெக்ஸா ஸ்கேன் அறிமுகம் செய்யப்பட்டுள் ளது. விரைவான மற்றும் எளிதான எலும்பு அடர்த்தி பரிசோத னைக்கு இந்த சாதனம் பயன்படும். இதனை பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணாநிதி துவக்கி வைத்தார். தாம்பரம்  துணை மேயர் ஜி.காமராஜ் முன்னிலையில், இலவச டெக்சா பரிசோதனை முகாமை தாம்பரம் மேயர் கே.வசந்த குமாரி துவக்கி வைத்தார். ஒரு நபருக்கு ஆஸ்டியோபோரோசிஸ் அபாயம் உள்ளதா இல்லையா என்பதை தீர்மானிக்க எலும்பு தாது  அடர்த்தியை  இந்த சாதனம் அளவிடுகிறது. 1 விழுக்காடு  பாதிப்பையும் இதனால் கண்டறிய முடியும்.  பொதுவாக இடுப்பு மற்றும் இடுப்பு (கீழ்) முதுகெலும்புக்கு பயன் படுத்தப்படுகிறது. முதுகெலும்பு எலும்பு முறிவு மதிப்பீட்டைச் செய்ய இந்த பரிசோதனை பயன்படுத்தப்பட லாம். இந்த பரிசோதனையானது, தொடர்ந்து முதுகுவலி  உள்ளவர்கள் அல்லது கடந்த ஆண்டில் ஒரு அங்குலத்திற்கும்  அதிகமான உயரத்தை இழந்தவர்கள் இந்த பரிசோதனையை செய்து கொள்ளலாம் என்று பார்வதி மருத்துவமனையின் தலைவர் டாக்டர் எஸ்.முத்துக்குமார் தெரிவித்துள்ளார். 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் டெக்சா ஸ்கேன் பரி சோதனையை இலவசமாக செய்து கொள்ளலாம். ஜூலை 31 ஆம் தேதி வரை  வரை  குரோம்பேட்டை அரசு பொது  மருத்துவமனைக்கு வரும் எலும்பு பிரச்சனை தொடர்பான  நோயாளிகளுக்கும் இங்கு இலவசமாக பரிசோதனை செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.