சென்னை, நவ.13- சென்னையில் சனிக் கிழமை இரவு பெய்த பலத்த மழையின் காரண மாக தாழ்வான பகுதிகளில் மீண்டும் தண்ணீர் தேங்கியது. சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவ மனையை மழைநீர் சூழந்துள்ளதால் அங்கு வந்த பொதுமக்கள் மழை தண்ணீரில் நடந்து சென்று தான் மருத்துவமனைக்குள் செல்ல முடிந்தது. மருத்துவமனை வளா கத்திலும் தண்ணீர் தேங்கி கிடப்பதால் நோயாளிகள் சிரமப்பட்டு அங்கு வந்து செல்கின்றனர். மழைநீர் உடனடியாக வடியாததால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளானார்கள். இதேபோல் தாம்பரம், டி.பி. மருத்துவ மனையிலும் மழைநீர் புகுந்ததால் அங்கும் நோயா ளிகள் அவதிப்பட்டனர்.