districts

img

தைலாபுரத்தில் குடிநீர் தட்டுப்பாடு: சிபிஎம் ஆர்ப்பாட்டம்

விழுப்புரம், மார்ச் 29- விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டத்திற்கு உட்பட்ட தைலாபுரம் ஊராட்சியில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை சரிசெய்ய வலியுறுத்தி புதனன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தைலாபுரம் ஊராட்சியில் உள்ள கிராம நிர்வாக அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு கட்சி கிளைச் செயலாளர் ஜி.ஆனந்தன் தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.முத்துக்குமார், வட்டச் செயலாளர் எம்.கே.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் வி.அர்ச்சுணன் ஆகியோர் பங்கேற்றனர். அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு  தனித்தனியாக  குடிநீர் வசதி ஏற்படுத்த வேண்டும், காந்தி நகர் பகுதியில் இடிந்து விழும் நிலையில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து புதியதாக அதிக கொள்ளளவு கொண்ட நீர்த்தேக்க தொட்டியை கட்டி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.  ஆர்ப்பாட்டத்தில் விதொச வட்டச் செயலாளர் வி.சுந்தரமூர்த்தி, வட்டக்குழு உறுப்பினர்கள் ஐ.சேகர்,எஸ்.பாலமுருகன், ஆர்.சேகர், ஏ.அன்சாரி, கே.நடராஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.