districts

img

எளிமை, நேர்மைக்கு சொந்தக்காரர் தோழர் பி.வி.முனுசாமி

சிபிஎம் தலைவர்கள் புகழஞ்சலி

திருவள்ளூர், ஜூலை 16- திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றி யத்திற்கு உட்பட்ட முல்லைவாயல் ஊராட்சி யில் பிறந்த தோழர் பி.வி.முனுசாமி மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் ஒன்றிய குழு உறுப்பினராக இருந்து பணியாற்றியவர். மேலும் வாலிபர் சங்கம்,  விவசாயிகள் சங்கம், விவசாய தொழிலாளர் சங்கம் ஆகிய  அமைப்புகளின் வளர்ச்சிக்காக பணியாற்றி யவர். 10-ஆண்டு காலம் ஊராட்சிமன்ற தலை வராக பணியாற்றினார். தன் பொறுப்பை பயன்படுத்தி, தனக்கென ஒரு தொகுப்பு வீட்டைக் கூட கட்டிக் கொள்ளாமல் கடைசி வரை குடிசை வீட்டில் நேர்மையாகவும், எளி மையாகவும் வாழ்ந்த தோழர் முனுசாமி கடந்த  ஜுன் 30ஆம் தேதி  உடல்நலக் குறைவால் காலமானார். நினைவேந்தல் நிகழ்ச்சி தோழர் முனுசாமியின் நினைவேந்தல் நிகழ்ச்சி அண்மையில் முல்லைவாயல் கிரா மத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு கட்சியின்  ஒன்றியச் செயலாளர் ஜி.வி.எல்லையன் தலைமை தாங்கினார். தோழர் பி.வி.முனுசாமி யின் உருவப்படத்தை மாநிலக் குழு உறுப்பி னர் ப.சுந்தரராசன் திறந்து வைத்தார். மாவட்ட  செயற்குழு உறுப்பினர் கே.செல்வராஜ் நினைவு கல்வெட்டை திறந்தார். மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால் செங்கொடியை ஏற்றினார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் ஏ.ஜி.சந்தானம், மாவட்ட குழு உறுப்பி னர்கள் பி.நடேசன், எஸ்.எம்.அனீப், அ.து.கோதண்டன், எம்.சந்திரசேகரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள். ரவி, சித்ரா, ரமணி,  ரமேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் சுமதி நன்றி கூறினார்.