சென்னை, மார்ச் 27 - மெட்ரோ ரயிலில் பயணம் செய்யும் பயணிகள் வசதிக்காக கடைகள், உணவகங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கொரோனா தொற்று பரவல் தொடங்கும் முன்பு 2020 ஆண்டு தினமும் 1 லட்சம் பயணிகள் மெட்ரோ ரெயிலை பயன்படுத்தி வந்தனர். தொற்று பரவலால் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டது. பயணிகள் எண்ணிக்கை வீழ்ந்தது. ஊரடங்கு தளர்வுக்கு பிறகு பயணிகள் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து தற்போது தினசரி 2 லட்சம் பேர் பயணிக்கின்றனர். மெட்ரோ ரெயில் நிலையங்களில் ஏடிஎம் வசதிகள் இல்லாத நிலையில் தற்போது 30க்கும் அதிகமான ரயில் நிலையங்களில் ஏடிஎம் நிறுவப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக கடைகள், உணவு கூடங்கள் அமைக்க வும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. மெட்ரோ ரயில் நிறு வனத்தின் சேவை, கட்டணம், வசதி, கட்டணம் போன்ற காரணங்களால் ஒரு சில மாதங்களிலேயே பயணி களின் எண்ணிக்கை 3 லட்சத்தை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, பயணிகள் அதிகம் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் கடைகள் அமைக்க ஒப்பந்தம் கோரப்பட்டுள்ளது. இதன்படி, பெட்டிக் கடைகள், டீ கடைகள், ஓட்டல்கள், அழகு சாதனப்பொட்கள், திண்பண்டங்கள், துணிக்கடைகள், செருப்பு கடைகள் உள்ளிட்ட பல்வேறு ரக கடைகளை அமைக்க அனுமதி கொடுக்கக்கப்பட உள்ளன. விரைவில் வாடகைக்கு கடைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.