districts

img

தோழர் தி.ரவீந்திரன் காலமானார்

மதுராந்தகம், ஜன.24- கட்டுமான தொழிலா ளர்கள் சங்க செங்கல்பட்டு மாவட்டப் பொருளாளர் தி.ரவீந்திரன் உடல் நலக் குறைவால் காலமானார். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகத்தை சார்ந்தவர் தோழர் டி.ரவீந்திரன் வயது 46 . இளம் வயதில் இந்திய மாணவர் சங்கத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த இவர், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், மார்க்சிஸ்ட் கட்சியின் நகரச் செயலாளர், மதுராந்தகம் வட்டக்குழு செங்கல்பட்டு மாவட்ட கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டப் பொருளாளர் என பல்வேறு அமைப்புகளின் மூலம் மக்கள் பணி செய்து வந்தார். இச்சூழ்நிலையில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். ஞாயிறன்று (ஜன.23) அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுராந்தகம் வட்டக் குழு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.வாசுதேவன், க.புரு ஷோத்தமன், மாவட்டக்குழு உறுப்பினர் பி.மாசிலாமணி, வட்டச் செயலாளர் எஸ்.ராஜா, சிஐடியு மாவட்டச் செய லாளர் க.பகத்சிங் தாஸ், கட்டுமான தொழிலாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் யோபுராஜ், சிஐடியு மாவட்டக் குழு உறுப்பினர் நடராஜன், சிபிஎம் நகர செயலாளர் துளசி, ஓய்வு பெற்றோர் அமைப்பின் நிர்வாகி வி.பொன்னுசாமி, தமுஎகச மாவட்டத் தலைவர் ரங்கநாதன், மாவட்ட பொருளாளர் கவி சேகர், ஆட்டோ ஓட்டுநர்கள் சங்க கவுரவத் தலைவர் டி.கிருஷ்ணராஜ், நிர்வாகி ரமேஷ் உள்ளிட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.