districts

img

தோழர் தேவியின் கணவர் காலமானார்

சென்னை, ஏப். 2 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சென்னை மாநகராட்சி முன்னாள் மாமன்ற உறுப்பினரும், வடசென்னை மாவட்டக்குழு முன்னாள் உறுப்பினருமான பா.தேவியின் கணவரும், கொளத்தூர் பகுதி செயலாளர் ப.ஹேமவதியின் தந்தையுமான சி.பாபு சனிக்கிழமையன்று (ஏப். 2) காலமானார். அவருக்கு வயது 69. அயனாவரம், நம்மாள்வார் பேட்டை யில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த அன்னாரது உடலுக்கு கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் அ.சவுந்தரராசன், வடசென்னை மாவட்டச் செயலாளர் எல்.சுந்தரராஜன், மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.கே.மகேந்திரன், டி.கே.சண்முகம், ம.பூபாலன், ஆர்.லொகநாதன், சரவண தமிழன், மத்திய சென்னை மாவட்ட செயற் குழு உறுப்பினர்கள் இரா.முரளி, சி.திரு வேட்டை, திருவிக நகர் பகுதிச் செயலாளர் செல்வராஜ், சிஐடியு வடசென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.ஜெயராமன், பொரு ளாளர் வி.குப்புசாமி, 98ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் ஆ.பிரியதர்ஷினி, பொது பள்ளிகளுக்கான மாநில மேடை  பொதுச் செயலாளர் பு.பா.பிரின்ஸ் கஜேந்திரபாபு, எழுத்தாளர் அப்பண்ணசாமி, பத்திரிகையாளர் மணி உள்ளிட்டோர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். இதனையடுத்து அன்னாரது உடல் ஓட்டேரி சுடுகாட்டில் தகனம் செய்யப்பட்டது.