சிதம்பரம், ஜூன் 14- அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் வேளாண் கழகம் சார்பில் வேளாண் கல்லூரி தின விழா வேளாண்துறை முதல்வர் சுந்தரவரதராஜன் தலைமையில் நடைபெற்றது. வேளாண் கழக துணைத் தலைவர் இமயவரம்பன் வரவேற்றார். துணைவேந்தர் இராம.கதிரேசன் விழாவை துவக்கிவைத்து, இயற்கை வேளாண்மை மற்றும் வளங்குன்றா வேளாண் மையத்தை திறந்து வைத்தார். தமிழ்நாடு வேளாண்பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி பேசுகையில், தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முக்கிய துறைகளில் இணைந்து பணிபுரிய வேண்டிய தேவை உள்ளது என்றார். அண்ணாமலைப் பல்கலைக்கழக பதி வாளர் சீதாராமன் வாழ்த்திப் பேசினார். தமிழ்நாடு வேளாண் புதுமை விருது பெற்ற இளநிலை வேளாண் இறுதி ஆண்டு மாணவர்கள் பிரேம்குமார், பிரேமதர்ஷினி ஆகியோர் கவுரவிக்கப்பட்டனர். மேலும் விளையாட்டு மற்றும் கலாச்சார போட்டி களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதில் துணைவேந்தரின் நேர்முக செயலாளர் பாக்கியராஜ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேளாண் கழக பொருளாளர் இலங்கை மன்னன் நன்றி கூறினார்.