districts

அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கு ரத்து

சென்னை, ஏப். 11 - கொரோனா விதிமுறைகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக மின்துரை அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது பதிவு செய்யப்பட்ட நான்கு வழக்கு களை சென்னை உயர் நீதிமன்றம்  ரத்து செய்தது. ஒன்றிய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக அமைச்சர் செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் 2020ம் ஆண்டு கரூரில் உண்ணா நிலை போராட்டம் நடத்தினர். கொரோனா விதிமுறைகளை மீறியதாக செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்தது. இதை எதிர்த்து செந்தில் பாலாஜி உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, வழக்கை ரத்து செய்தார்.