உழவுத் தொழிலுக்கு அடுத்ததாக தொன்மை வாய்ந்தது அச்சக தொழில். ஓசை யில் இருந்து மொழி பிறந்து, மொழியின் பரிணாம வளர்ச்சியால் எழுத்துக்கள் தோன்றியது. எழுத்துக்கள் தோன்றி ஓலைச் சுவடிகளில் பதிய துவங்கிய போதே அச்சக தொழிலின் ஆதி வடிவம் தொடங்கியது. நாடுகளை பிடிக்க வந்த ஆங்கிலேயர் கள், ஐரோப்பாவில் ஏற்பட்ட தொழிற்புரட்சி, விஞ்ஞான புரட்சியின் தாக்கத்தை இந்தியாவிலும் கொண்டு வந்தனர். அதில் ஒன்றுதான் அச்சக இயந்திரங்கள். தொடக்க காலத்தில் டிரிடில் இயந்திரங்களில் ஈயத்தில் வார்க்கப்பட்ட எழுத்துக்களை கோர்வையாக்கி அச்சடிக்கப்பட்டன. அச்சு இயந்திரங்களின் தொழில்நுட்ப வளர்ச்சி, 1985க்கு பிறகு கணினி வருகை போன்றவை அச்சக துறையில் எண்ணற்ற மாற்றங்களை கொண்டு வந்தது. கணினி அடிப்படையில் வேகம் நிறைந்த பல வண்ணங்களில் அச்சடிக்கும் இயந்திரங் கள் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு ஆட்டோ மேஷன் (தானியங்கி) என்ற வகை யில் புதிய இயந்திரங்கள் உருவாக்கப் பட்டு, அச்சக தொழிலில் பெரும் புரட்சி ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நேரடியாகவும், மறை முகமாகவும் அச்சக தொழிலில் 20 லட்சம் பேர் சிறு, குறு தொழில் முனைவோர் மற்றும் பணியாளர்களாக உள்ளனர். இந்தியா முழுவதும் 5 கோடி பேர் இந்த தொழிலில் உள்ளதாக அரசின் செய்தி குறிப்பு கூறுகி றது.
புதிய தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வருகிற இயந்திரங்களினால், தொழில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடை மட்டத்தில் உள்ள சிறு, குறு தொழில் முனை வோர் தொழிலை விட்டு வெளியேற வேண்டி யுள்ளது. குறிப்பாக பேப்பர், பிளேட், இங்க், கெமிக்கல் போன்ற மூலப்பொருட்களின் விலை உயர்வால் வங்கியில் கடன் வாங்கி, வாடகைக்கு இடம் எடுத்து தொழில் நடத்து பவர்களால் தொழிலில் நிற்க முடிய வில்லை. அச்சகத்திற்கான மூலப் பொருட்களின் விலை பிப்ரவரி மாதம் 20 விழுக்காடு கூடியது. ஏப்ரல் 1ந் தேதி முதல் மேலும் 40 விழுக்காடு கூடியுள்ளது. இதனால் சிறு அச்சக உரிமையாளர்கள் தொழில் நடத்த முடியாமல் கடும் நெருக்கடியில் சிக்கி தவிக்கின்றனர். மூலப்பொருட்களை விநியோகம் செய்யும் ஓரிரு பெருநிறுவனங்கள், கொரோனா காலத்தில் தொழில் நடக்காத நிலையிலும் விலையேற்றம் செய்து கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றன. இத னால் சிறு அச்சக உரிமையாளர்கள் விலை யேற்றத்தையும், தொழில் போட்டியையும் சமாளிக்க முடியாமல் தொழிலை விட்டு வெளியேற தொடங்கி விட்டனர். 2020-2022 வரையான கொரோனா ஊரடங்கு காலத்தில் தொழில் முடக்கம் காரணமாக பல ஆயிரம் அச்சகர்கள் தொழிலை விட்டு வெளியேறினர். தற்போ துள்ளவர்களும் விலையேற்றம் காரணமாக தொழிலை நடத்த முடியாமல் நட்டத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மூலப் பொருட்களான பேப்பர், இங்க், பிளேட், கெமிக்கல், காட்டன் போன்றவற்றின் விலையை குறைக்க வேண்டும், அச்சக உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுக்காக்க தனி நல வாரியம் அமைக்க வேண்டும் என வலியுறுத்தி ஏப். 6 அன்று சென்னை ராயப்பேட்டையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த கோரிக்கைகள் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் சிறுகுறு உரிமையாளர்க ளும், தொழிலாளர்களும் காத்திருக்கின்ற னர். தி.ஜெயசங்கர் மாநிலக்குழு உறுப்பினர், சிஐடியு