districts

img

மக்களைத்தேடி மருத்துவத் திட்டத்தால் 72 லட்சம் பேர் பலன்: மா.சுப்ரமணியன்

சென்னை, ஜூன் 4- மக்களைத்தேடி மருத்துவ திட்டத்தால் தமிழகத்தில் குறுகிய காலத்தில் சுமார் 72 லட்சம் பேர் பயனடைந்துள்ளதாக மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். இதய நோய் மருத்துவ நிபுணர்கள் கலந்து கொண்ட தமிழ்நாடு இன்டர் வென்ஷனல் கவுன்சிலின் 8வது ஆண்டு மாநாட்டை சென்னையில் சனிக்கிழமை (ஜூன் 4) தொடங்கிவைத்து அவர் பேசியதாவது: தமிழத்தில் மருத்துவ கட்டமைப்பு பலமாக இருக்கிறது. ஒரு மாவட்டத்தில் புதிதாக அரசு மருத்துவக்கல்லூரி வந்து விட்டால் ஏற்கனவே இருக்கக்கூடிய மாவட்ட தலைமை மருத்துவ மனையை மேம்படுத்தும் போது ஒரு மாவட்டத்திற்கு இரண்டு பெரிய மருத்துவ மனைகள் கிடைக்கின்றன.  இந்தாண்டு புதிதாக 11 அரசு மருத்துவக்கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளன. 19 மாவட்டங்களில் மாவட்ட அரசு மருத்து வனைகள் புதிதாக உரு வாக்கவேண்டிய அவசி யம் ஏற்பட்டுள்ளது.  இது போதானது என்று மக்கள் பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்ததால்5 இடங்களில் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு நிகராக 25 மருத்துவமனைகள் ரூ. 1050 கோடி ரூபாய் செல வில் இந்தாண்டு மேம்படுத்துவதற்கு முடி வெடுத்து பணிகளை அரசு தொடங்கியுள்ளது.   தமிழத்தில் கடைகோடி மனிதனுக்கும் மருத்துவ சேவையை உறுதிப்படுத்தும் வகையில் பணிகள் நடை பெற்று வருகின்றன.

கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தொடங்கப்பட்ட மக்களைத் தேடி மருத்துவத்திட்டத்தால் 72லட்சத்து 2ஆயிரத்தி 649 பேர் பயனடைந்துள்ளனர். நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம்  உள்ளிட்டவற்றால் பாதிக்கப் பட்டுள்ளவர்களுக்கு இந்த திட்டத்தால் சிகிச்சையும் மருந்து பெட்டகங்களும் வழங்கப்படுகிறது. இத னால் மாநிலத்தில் தொற்றா நோய்களினால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை பெருமளவு குறைக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் அடிக்கடி விபத்து ஏற்படும் இடங்கள் அடையாளம் காணப்பட்டு 640 மருத்துவமனைகளில் ‘ இன்னுயிர் காப்போம் நம்மை காக்கும் 48 என்ற  திட்டம் கடந்தாண்டு டிசம்பர்18ஆம் தேதி  தொடங்கப்பட்டது. எங்கே விபத்துநடந்தாலும் விபத்து நேர்ந்தவுடன் அவர்களை கொண்டு வந்து மருத்துவமனைகளில் சேர்த்தால் அரசு உடனடி யாக ரூ.1லட்சம் தந்து அவர்களின் உயிரை காப்பாற்றும் உன்னதமான திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.  இதுவரை இந்த திட்டத்தால் 71 ஆயிரத்தி 440 பேர் பயனடைந்துள்ளனர். இவர்களின் உயிர் காப்பாற்ற அரசு 64 கோடியே 46 லட்சத்து 82ஆயிரம் ரூபாய் செலவழித்துள்ளது.

இந்த திட்டத்தை தேசிய அளவில் செயல்படுத்த மத்திய சுகாதாரத்துறை செயலர் நமது சுகாதாரத்துறை அதிகாரிகளை டில்லிக்கு அழைத்துள்ளார்.  முன்பு விபத்து ஏற்பட்டால் உடனே சம்மந்தப்பட்ட நபரை மருத்துவமனைக்கு அழைத்து வந்து அவர்களை காப்பாற்றும் நபருக்கு ரூ5 ஆயிரம் தரும் திட்டம் நமது மாநிலத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. இவ்வாறு அமைச்சர் பேசினார்.  இந்த மாநாட்டில்  மூத்த இதய நோய் நிபுணர்கள் எஸ்.தணிகாசலம், சொக்கலிங்கம், ஜே. பாலசந்தர் உள்ளிடோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருதினை அமைச்சர் வழங்கினார். தமிழ்நாடு இன்டர்வென்ஷனல் கவுன்சில் தலைவர் டாக்டர் சி.முர்த்தி,, இந்திய இதய சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர் விஜய் எச் பங் உள்பட பலர் பேசினர்.