சென்னை, மார்ச்16- மார்பக புற்றுநோய் குறித்து சமூகத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக அண்ணாநகர் சைக்கிள் ஓட்டுதல் மன்றத்துடன் இணைந்து பிரதர்ஸ் சைக்கிள் “பிங்க் பெடல்’’ என்ற ஓட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது. பிரதர்ஸ் சைக்கிள் அண்ணாநகர் தொடக்க நிகழ்ச்சியை முன்னிட்டு நடைபெற்ற இந்த ஓட்டத்தில் சென்னையில் இருந்து 75க்கும் மேற்பட்ட சைக்கிள் ஆர்வலர்கள் கலந்து கொண்டு மார்பக புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி னார்கள். ஜிஎஸ்டி மண்டல இணை ஆணையர் சி.மோகன் கோபு இதனை கொடியசைத்து தொடங்கி வைத்தார். திரைப்பட கலைஞர் அரவிந்த், பிரதர்ஸ் சைக்கிள் உரிமை யாளர்கள், மற்றும் இந்தியா டர்ன்ஸ் பிங்க் என்ற மார்பக புற்றுநோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் அமைப்பின் தன்னார்வலர்கள் இதில் கலந்துகொண்டனர். சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த மாதம் பிரத்யேக மகளிர் சைக்கிள் பேரணியை நடத்தப் போவதாக பிரதர்ஸ் சைக்கிள் அறிவித்துள்ளது.