சென்னை, மார்ச் 17- சமூகத்தில் இயற்கை சீற்றங்கள், விபத்து போன்ற நிகழ்வுகளின்போது மக்களின் உயரை காப்பாற்றி நிஜ வாழ்க்கை கதாநாயகர்களாக உள்ளவர்களுக்கு ஆண்டு தோறும் அலர்ட் பீயிங் விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகளை மாநில சுகாதாரத்தறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார். தனிநபர்கள், நிறுவனங்கள் மற்றும் மக்கள் என பல்வேறு விருது வகைகளில் 13 நிஜ வாழ்க்கை ஹீரோக்களுக்கு விருதுகளை அமைச்சர் வழங்கினார். சென்னை பல்கலை கழக துணை வேந்தர் பேராசிரியர் டாக்டர் எஸ்.கௌரி சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டார். அலர்ட் ஒரு தன்னார்வ லாபநோக்க மாற்ற அமைப்பாகும். இந்த நிகழ்ச்சியில் கிராமப்புற மக்களுக்கு முதலுதவி வழங்கும் அலர்ட் விழிப்புணர்வு செல்போன் ரேடியோ தொடங்கப்பட்டது.