districts

img

இ-சேவை மையங்களை மூடும் முயற்சி: ஊழியர்கள் ஆவேசப் போராட்டம்

சென்னை, மார்ச் 21- பொது மக்களுக்கு சேவை செய்து வரும் இ-சேவை மையங்களை மூடக் கூடாது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு தரவு உள்ளீட்டாளர்கள் சங்கம் சார்பில் சென்னை எழும்பூரில் செவ்வாயன்று (மார்ச் 21) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. துணைத் தலைவர் எஸ்.சுகுமார் தலைமை தாங்கினார். சிஐடியு மாநில  பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன் ஆர்ப்பாட் டத்தை துவக்கி வைத்து பேசினார். உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பாளர் எம்.தன லட்சுமி, சிஐடியு துணைத் தலைவர்கள் சந்திரன், இ.பொன்முடி, சங்கத்தின் பொதுச் செயலாளர் கா.மனோஜ்குமார், பொருளாளர்  பி.சசிரேகா, நிர்வாகிகள் எஸ்.சபரிஷ், ஈ.பாலவிநாயகம், முகை தின் அப்துல் காதர், ஐ.வினோ லியா ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். கா.சையத் நன்றி கூறினார். ஒப்பந்த முறையை கைவிட்டு 480 நாட்கள் பணி செய்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும். குறைந்தபட்ச மாத ஊதி யம் ரூ. 26,000  வழங்க  வேண்டும். பொது மக்க ளுக்கு சேவை செய்வ தற்காக தொடங்கப்பட்ட அரசு மையங்களை லாபம்  இல்லை எனக் கூறி தொடர்ந்து மூடி வருவதை உடனடியாக நிறுத்த  வேண்டும். தனியார் இ சேவை மையங்களை தொடர்ந்து அதிகரித்து  தனியார் மயமாக்கப்படு வதை உடனடியாக கைவிட்டு அரசு இ சேவை மையங்களை அதிகரித்து பொதுமக்களுக்கு சேவை கள் சிறந்த முறையில் சென்ற டைவதை உறுதி செய்ய வேண்டும். பிஎப், இஎஸ்ஐ பலன்கள்  அனைத்து தரவு உள்ளீட்டா ளர்களுக்கும் சென்றடை வதை உறுதி செய்ய வேண்டும். பெண் ஊழியர்க ளின் பாதுகாப்பை உறுதிப் படுத்தும் விதமாக உள் புகார் கமிட்டிகள் அமைக்க வேண்டும். தொழிலாளர் நல சட்டங்கள் முழுமையாக அமல்படுத்த வேண்டும்.  தமிழ்நாடு அரசு அறிவித் துள்ள மகப்பேறு விடு முறையை அனைத்து தரவு உள்ளீட்டாளர்களுக்கும் வழங்குவதை உறுதிப் படுத்த வேண்டும். நாளொன்றுக்கு 5 முறை வருகை பதிவு முறையை 2 முறையாக மாற்றி அமைக்க வேண்டும். பொது  மக்களுக்கு தடையின்றி சேவைகளை வழங்க பேப்பர், டோனர் உள்ளிட்ட உபகரணங்களை இனி மேலாவது தடையின்றி வழங்குவதை உறுதி செய்ய  வேண்டும். ஆதார் சேவை மையங்களில் பணிபுரியும் ஊழியர்களின் அடையாள அட்டை முடக்கம் செய் வதை நிரந்தரமாக கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி தலைவர்கள் பேசினர்.