சென்னை, ஜூலை 4 - வீட்டு உபயோக பொருட்களை விற்பனை செய்யும் ‘பொன்மணி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ கடை திங்களன்று (ஜூலை 4) சைதாப்பேட்டையில் திறக்கப்பட்டது. சென்னை சைதாப்பேட்டை மார்க்கெட் பகுதியில் பொன்மணி ஸ்டோர், பொன்மணி அன் கோ என்ற பெயரில் கடைகள் இயங்கி வரு கின்றன. இங்கு குறைந்த விலையில் பாத்திரம் உள்ளிட்ட வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது. சைதாப்பேட்டை யின் அடையாளங்களில் ஒன்றாக இந்த கடைகள் விளங்குகின்றன. இதன் தொடர்ச்சியாக ‘பொன் மணி டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்’ கடை திறக்கப்பட்டுள்ளது. இரும்பு மற்றும் மரத்தாலான கட்டில், மெத்தை, சோபா, பீரோ, விதவிதமான சேர், பூஜை அறை, கம்பியூட்டர் டேபிள், பிரம்பு ஊஞ்சல் உள்ளிட்ட அறைக்க லன்கள் குறைந்த விலையில் விற்ப னைக்கு வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கான தொட்டில், சைக்கிள், வாக்கர் போன்றவையும் இங்கு கிடைக்கின்றன. சைதாப்பேட்டை மார்க்கெட் (சுரங்கப்பாதை அருகே) பஜார் சாலை யில் அமைந்துள்ள இந்த கடையை பாதிரியார் பால் பிர்லா திறந்து வைத்தார். கடையின் உரிமையாளர் பொன்சிங் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.