வண்டலூர், ஜூலை 4- திருவண்ணாமலையிலிருந்து அரசு பேருந்து பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த போது ஞாயிறன்று அதிகாலை கூடுவாஞ் சேரி அருகே கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 16 பேர் படுகாயம் காயம் அடைந்தனர். தகவல் அறிந்த குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று காயம் அடைந்த பயணிகளை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதனையடுத்து சாலையில் கவிழ்ந்து கிடந்த பஸ்சை கிரேன் மூலம் போலீசார் அப்புறப் படுத்தினர். இதனால் போக்குவரத்து சீரானது. இந்த சம்பவத்தின் காரண மாக திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.