செங்கல்பட்டு,நவ.4- செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்துள்ள கோதண்டராமன் நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் குளிர்சாதன பெட்டி வெடித்ததில் மூன்று பேர் உயிரிழந்த னர். சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி அருகே உள்ள ஊரப்பாக்கம் கோதண்ட ராமன் ஜெயலட்சுமி தெருவில் ஆர்.ஆர். பிருந்தாவன் என்ற பெயரில் அடுக்கு மாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் ராஜ் குமார் என்பவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு பார்கவி என்ற மனைவி யும், ஆத்ரேயா என்ற 7 வயது மகளும் உள்ளனர். இவர்களது வீட்டில் ராஜ்குமாரின் மாமியார் கிரிஜா (66), தங்கை ராதா (55) ஆகியோரும் வசித்து வந்தனர். இந்த நிலையில் வெள்ளியன்று காலை 6 மணி அளவில் ராஜ்குமாரின் வீட்டில் இருந்து வெடி சத்தம் கேட்டது. உடனடி யாக அருகில் உள்ளவர்கள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது கதவு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்தது. இதை தொடர்ந்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் திரண்டு ராஜ்குமாரின் வீட்டு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று காப்பாற்ற முயன்றனர். மின்கசிவு காரணமாக வீட்டில் இருந்த பிரிட்ஜ் வெடித்து சிதறி இருந்தது. வீட்டில் ராஜ்குமார், அவரது மாமியார் கிரிஜா, இவரது தங்கை ராதா ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்து கிடந்தனர். பிரிட்ஜில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக வெடித்து சிதறியதும் இதன் காரணமாக தீ விபத்து ஏற்பட்டு புகை மூட்டம் மற்றும் கேஸ் வெளியேறி மூச்சு திணறல் ஏற்பட்டு 3 பேரும் பரிதாபமாக பலியாகி இருப்பதும் தெரியவந்தது. ராஜ்குமாரின் மனைவி பார்கவி, மகள் ஆத்ரேயா ஆகியோர் மயக்கம் அடைந்த னர். அவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட னர். இது பற்றி தகவல் கிடைத்ததும் ஊரப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று விசாரணை நடத்தினர். உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
ஆட்சியர் வேண்டுகோள்
சம்பவம் நடைபெற்ற இடத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் ஆய்வு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராகுல்நாத், முதற்கட்டமாக நடைபெற்ற விசாரணையின் அடிப்படை யில் மின் கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது. ஒரு வருடங்களுக்கு மேலாக இந்த வீடு பூட்டி இருந்துள்ளது. இதன் காரணமாக மின்சார சாதனங்கள் ஆகியவை பழுதடைந்து இருக்கும், அதை பயன்படுத்திய காரணத் தினாலேயே இந்த விபத்து நடைபெற்றி ருக்கலாம் என தெரிவித்தார்.