districts

பாசன கால்வாய்கள் சீரமைக்கப்படும் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உறுதி

செங்கல்பட்டு, மார்ச் 24 – விவசாய நிலங்களுக்கு செல்லும் பாசன கால்வாய்கள் அனைத்தும் நீர்ப் பாசன சங்கங்களை கூட்டி இரண்டு மாதங்களுக்குள் சீர் செய்யப்படும் என  விவசாயிகள் நலன் காக்கும் கூட்டத்தில்  மாவட்ட ஆட்சியர் உறுதியளித்தார். செங்கல்பட்டு விவசாயிகள் நலன்  காக்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர்  ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் வியா ழனன்று (மார்ச் 24)  நடைபெற்றது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள் கலந்து கொண்ட னர். மாவட்ட நிர்வாகம் உடனடியாக அரசு நேரடி கொள்முதல் நிலையங் களை திறக்க வேண்டும், ஏரிகளை தூர்வார நடவடிக்கை எடுத்திட வேண்டும், பாசன கால்வாய்களை  சீரமைக்க வேண்டும், ஏரிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவேண்டும், படாளம் கூட்டுறவு சர்க்கரை ஆலை விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை வழங்கிட வேண்டும், கல்குவாரிகளை தடை செய்திட வேண்டும், கிராம நத்தத்தில குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்கிட வேண்டும்,  ஏரியில் இருந்து வண்டல் மண் எடுக்க விவசாயிகளுக்கு அனு மதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினர். இதற்கு பதிலளித்து பேசிய மாவட்ட  ஆட்சியர், செங்கல்பட்டு மாவட்டத்தில் 85 நேரடி நெல் கொள்முதல் நிலையங் கள் அமைக்கப்பட்டுள்ளது. வண்டல் மண் எடுப்பதற்கும், ஏரிகளை தூர்வாரு வதற்கான நடவடிக்கை எடுப்பதற்கு அரசுக்கு பரிந்துரை செய்யப்படும், நீர்பாசன சங்கங்களை கூட்டி இரண்டு  மாதகாலத்திற்குள் பாசன கால்வாய்கள்  அனைத்தும் சீர் செய்யப்படும் என தெரிவித்தார். மேலும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தனியார் வியாபாரிகளின் தலையீடு, முறை கேடு இருந்தால் மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்தால் காவல்துறை யினரை வைத்து சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.