districts

img

ஒருசிலர் நலனுக்காக சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை நசுக்குவதா?

செங்கல்பட்டு, டிச. 27- செங்கல்பட்டு மாவட்ட அரசு மருத்துவ மனை அருகில் வியாபாரம் செய்து வந்த சாலையோர வியாபாரிகள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களின்  வாழ்வாதாரத்தை பாதுகாத்திட வலியுறுத்தி சிஐடியு சார்பில் செவ்வாயன்று (டிச.27) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 50க்கும் மேற்பட்ட வர்கள் சாலையோரத்தில் கடை வைத்து  பிழைப்பு நடத்தி வருகின்றனர்.   மேலும் ஆட்டோ ஓட்டுநர்கள் ஸ்டாண்ட் வைத்து ஆட்டோ ஓட்டி வருகின்றனர். இந்நிலையில் தற்போது அப்பகுதியில் இருந்த கடை களை நகராட்சி நிர்வாகம் ஒரு சிலர் நலனுக்காக  திடீரென அகற்றியுள்ளது. இதனால் சாலையோரத்தில் கடை வைத்து வியாபாரம் செய்து வந்த மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்.  இதனைத் தொடர்ந்து சாலையோர வியாபாரிகள் சட்டம் 2014ன் படி மீறி  கடைகளை அகற்றிய நகராட்சி  நிர்வாகம் மீது நடவடிக்கை எடுத்திட வேண்டும், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகில் சாலையோரத்தில் கடை வைத்திருந்தவர்களுக்கு அதே பகுதியில் மீண்டும் வியாபாரம் செய்ய நடவடிக்கை எடுத்திட வேண்டும்,  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு  முறைசாரா தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.   சங்கத்தின்  மாவட்டத் தலைவர் இ.ராமமூர்த்தி தலைமையில் செயலாளர் யோபுராஜ், மோட்டார் வாகன சங்கத்தின் நிர்வாகி நாராயணன், கட்டு மான தொழிலாளர்கள் சங்கத்தின் நிர்வாகி செல்வக்குமார், ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் பி.மாசிலா மணி, மார்க்சிஸ்ட் கட்சியின் செங்கல்பட்டு பகுதி செயலாளர் கே.வேலன், பகுதி குழு உறுப்பினர்கள் ரவி, அன்பு உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து சிஐடியு மாவட்டத் தலைவர் கே.சேஷாத்திரி பேசினார். முன்னதாக செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் இருந்து ஊர்வலமாகச் சென்று ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனுவினை வழங்கினர்.