districts

img

சாலை ஓரத்தில் மழைநீர் தேக்கம் : நோய் தொற்று பரவும் அபாயம்

அரியலூர், மார்ச்.10- அரியலூர் மாவட்டம் ஜெயங் கொண்டத்தைஅடுத்து ஆண்டி மடம் கவரப்பாளையம் மகாமாரி அம்மன் ஆலயத்திற்கு அருகே சாலையோரத்தில் பள்ளம் இருப்பதால். மழைநீர் தேங்கி சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.  மேலும் அதில் கொசுப்புழு உற்பத்தியாகி மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளதால் போர்க்கால அடிப்படையில் சாலையை செப்பனிட வேண்டும் என அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  மேலும் சாலையில் ஏற் பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் எதிரே வரும் வாக னங்களுக்கு ஒதுங்க இடமில்லா மல் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.