districts

மருத்துவக் காப்பீட்டு நிர்வாக இயக்குநருக்கு பிடி ஆணை நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவு

அரியலூர், ஜன.19- தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கு மருத்துவ காப்பீட்டை நிர்வகித்து வரும் தனி யார் காப்பீட்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குநருக்கு அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம் பிடி ஆணை பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண் டத்தில் உள்ள அரசு பள்ளியில் ஆசிரி யையாக பணியாற்றி வருபவர் பாரதி  (43). இவர், தமிழக அரசு ஊழியர்களுக் கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்ட சந்தா தாரராக உள்ளார். இந்நிலையில், இவரது கணவர் சுவாமி நாதனுக்கு சென்னை தனியார் மருத்துவ மனையில் அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதையடுத்து மருத்துவ சிகிச்சைக்கான செலவை மருத்துவ காப்பீட்டு நிறுவனம் முழுவதுமாக தர மறுத்துவிட்டதால், அந்  நிறுவனத்தின் மீது கடந்த 2020-ஆம் ஆண்டு  அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த ஆண்டு ஜூலை  மாதம் புகார்தாரருக்கு மருத்துவ சிகிச்சைக்  காக ஏற்பட்ட செலவில் அளிக்க வேண்டிய தொகை ரூ.1,98,308 மற்றும் சேவை குறை பாட்டால் ஏற்பட்ட சிரமங்களுக்கு இழப்பீ டாக ரூ.50 ஆயிரத்தை தமிழக அரசின் சார்  பில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிர்வகிக்கும் தனியார் நிறுவனம் ஆகஸ்ட் (2022)-க்கு வழங்க வேண்டும் என அரிய லூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணை யம் உத்தரவிட்டது. காப்பீட்டு நிறுவனம் தொகையை வழங்காததால், நடவடிக்கை எடுக்கக் கோரி பாரதி கடந்த ஆண்டு நவம்பர் மாதம்  அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார்.  இதுதொடர்பாக விசாரணை நாளில் நிறு வனத்தின் சார்பில், நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் யாரும் ஆஜராகவில்லை. இதனால் எம்டி இந்தியா ஹெல்த் இன்சூ ரன்ஸ் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்கு நருக்கு பிடிஆணை பிறப்பித்து அரியலூர் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத் தலைவர் வீ.ராமராஜ் தலைமையிலான அமர்வு உத்தவிட்டது.