செங்கல்பட்டு, ஜன. 27- செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தா ளர்கள் கலைஞர்கள் சங்க கிளை துவக்க விழா சிவக்குமார் தலைமையில் புதனன்று (ஜன. 26) மறைமலை நகரில் நடைபெற்றது. தமுஎகச செங்கல்பட்டு மாவட்டத் தலைவர் என்.டி.ரங்கநாதன், மாவட்டப் பொருளாளர் கவிசேகர், மாவட்ட துணைச் செயலாளர் மதுகை. சுதா ஆகியோர் பங்கேற்றனர். முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கே.சண்முகசுந்தரம் வாழ்த்திப் பேசினார். தமுஎகச வண்டலூர் பகுதி கிளைத் தலைவராக சிவப்பிரகாசம், செயலாளராக சிவகுமார், பொருளா ளராக யுவஸ்ரீ ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.