செங்கல்பட்டு, மார்.12- செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் கடற்கரையில் குழு விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் மார்ச் 15 அன்று நடத்தப்படவுள்ளது. இந்த போட்டியில் செங்கல் பட்டு மற்றும் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த அனைத்து வீரர், வீராங்கனைகளும் கலந்து கொள்ளலாம். போட்டிகள் அனைத் தும் காலை 9 மணிக்கு தொடங்கும். தாமதமாக வரும் அணியினர் போட்டியில் பங்கேற்க இயலாது. கடற்கரை கால்பந்து – 5 நபர்கள், கடற்கரை கபாடி – 6 நபர்கள், கடற்கரை கையுந்து பந்து – 2 நபர்கள் மட்டும் போட்டியில் கலந்துக்கொள்ளலாம். ஒருவர் ஒரு போட்டியில் மட்டும் கலந்துக் கொள்ள வேண்டும். இந்த போட்டி யில் பங்கேற்க வயது வரம்பு கிடையாது. போட்டிகள் இருபால ருக்கும் நடத்தப்படவுள்ளது. மாநில அளவிலான போட்டி பள்ளி கல்லூரியில் பயிலும் மாணவ மாணவியர்கள் பள்ளி படிப்புச் சான்றுகொண்டு வருதல் வேண்டும். வெற்றி பெற்ற வீரர் வீராங்கனைகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணை யத்தால் வழங்கப்படும். இந்த குழு விளையாட்டு போட்டியில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் வீராங்கனைகளை தேர்வு செய்யப் பட்டு அவர்களுக்கு சீருடைகள் வழங்கி மாநில அளவிலான போட்டிக்கு அரசு செலவில் அழைத்து ச்செல்லப்படுவர். போட்டியில் கலந்துகொள்ள விருப்பம் உள்ள வீரர், வீராங்கனை கள் மாமல்லபுரம் கடற்கரைக்கு மார்ச் 15ஆம் தேதி காலை 7.30 மணிக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவல ரிடம் ஆஜராக வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளை யாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் 7401703481 என்ற கைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஆ.ர. ராகுல் நாத் தெரிவித்துள்ளார்.