districts

img

சாலை வசதி கேட்டு மறியல்

     வேலூர், பிப். 21- வேலூர் சாய்நாதபுரம் தனியார் பெண்கள் கல்லூரியின் பின்புறம் சாஸ்திரி நகர், கணபதி நகர், முருகன் நகர், கன்னிகா புரம், செட்டியார் தோப்பு, வள்ளலார் நகர் போன்ற பகுதிகள் உள்ளன. இந்த பகுதிக்கு செல்லும் பொதுமக்கள் தனியார் பெண்கள் கல்லூரியை ஒட்டி உள்ள சாலையை பல ஆண்டுகளாக பயன்படுத்தி வருகின்றனர். கடந்த பல ஆண்டுகளாக அந்த சாலை சீரமைக்கப்பட வில்லை. இதனால் வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் மிகவும் சிரமப்பட்டனர். இந்நிலையில் சாலையை அடைத்து சுற்றுச்சுவர் கட்ட உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் சாய்நாதபுரத்தில் உள்ள ஆரணி சாலையில் திங்களம்ன்று (பிப். 21) மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பாகாயம் காவல் துறையினர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தற்போது மாநகராட்சி தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. பணிகள் முடிந்த பிறகு அதிகாரிகள் மூலம் சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.