districts

img

வேலூர் அருகே நாகநதி ஆற்றில் வெள்ளப்பெருக்கு

வேலூர், டிச. 10- மாண்டஸ் புயல் கரையைக் கடந்த நிலையில் வேலூர் மாவட்டத்திலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் வேலூர் மாவட்டம் கணியம்பாடி அடுத்த சிங்கிரி கோவில் அருகே பாயும் நாகநதி ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. தொடர் மழை மற்றும் காற்று காரணமாக காத்தாளம் பட்டு, தெற்கு கொல்லைமேடு, சிங்கிரி கோவில் உள்ளிட்ட பகுதியில் பயி ரிடப்பட்டு அறுவடைக்கு தயாராக இருந்த சுமார் 500க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து நாச மானது. அமிர்தி நீர்வீழ்ச்சியில் க வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளத்தால் அமிர்தி சிறு மிருக காட்சி சாலைக்கு அருகே உள்ள தரைப்பாலம் முழுவதுமாக மூழ்கி யுள்ளது. தொடர்ந்து வெள்ளம் அதி கரித்து வருவதால் ஜமுனா மரத்தூர், நாடனூர், நம்மியம்பட்டு, தொங்குமழை, கானமலை, பாலாம் பட்டு உள்ளிட்ட மலை குக்கிராமங்க ளுக்கு செல்லும் சாலை துண்டிக்கப் பட்டது. இதனால் அப்பகுதி மக்கள் கடும் அவதிப்படுகின்றனர்.