districts

விருதுநகர் மார்க்கெட்டில் ஒரே வாரத்தில் நல்லெண்ணெய் ரூ.184 உயர்ந்தது வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி

விருதுநகர், மே 14- விருதுநகர் மார்க்கெட்டில் நல்லெண் ணெய் விலை டின் ஒன்றுக்கு ( 15 கிலோ)  ரூ.184 வரை உயர்ந்தது. இதனால் வாடிக்கை யாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். பெட்ரோல், டீசல் விலை நாள்தோறும் உயர்ந்து வரும் நிலையில் விருதுநகர் மார்க்  கெட்டில் நல்லெண்ணெய் விலை திடீரென 7 நாட்களில் ( 15 கிலோ) ரூ.184 வரை உயர்ந்  தது. இதனால் வாடிக்கையாளர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகினர். விருதுநகர் மார்க்கெட்டில் வாரந்தோ றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் வெளியிடப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த வாரம் நல்லெண்ணெய் டின் ஒன்றுக்கு ரூ.4538-க்கு விற்பனை செய்  யப்பட்டு வந்தது. இந்நிலையில், இந்தவாரம் திடீரென உயர்வு ஏற்பட்டு ரூ.4702க்கு விற்  கப்பட்டது.   விருதுநகரில் பிரபலபமான  எண்ணெய் தயாரிப்பு நிறுவனங்கள் இயங்கி வரு கின்றன. அந்தவகையில் நல்லெண்ணெய் விலையை தீர்மானிப்பதில் இந்த நிறு வனங்களே முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்  படுகிறது. இந்தநிலையில், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில் பாமாயில் விலை ரூ.110 வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் 15 கிலோ பாமாயில் ரூ.2640க்கு விற்கப்பட்டு வந்தது. இறக்குமதி அதிகரிப்பால் ஒரே  வாரத்தில் ரூ.110 சரிவு ஏற்பட்டு ரூ.2530க்கு தற்போது விற்கப்படுகிறது. இதேபோல் முண்டு வத்தல் கடந்த வாரத்தை விட அதிக அளவில் சந்தைக்கு வந்துள்ள காரணத்தால் குவிண்டால் ஒன் றுக்கு ரூ.6 ஆயிரம் வரை குறைந்துள்ளது. கடந்த வாரம் ரூ.24 ஆயிரம் முதல் 30 ஆயி ரம் வரை விற்கப்பட்டு வந்த முண்டு வத்தல் விலையானது, இந்த வாரம் ரூ.18 ஆயிரம்  முதல் 28 ஆயிரம் வரை விற்பனையாகிறது. மேலும் கடலை எண்ணெய் ரூ.2800, துவரம் பருப்பு ( குவிண்டால்) ரூ.8200, நயம்  துவரம் பருப்பு ரூ.9 ஆயிரம், பாசிப்பருப்பு ரூ.8900, லயன் உளுந்து ரூ.7100, பாசிப்பயறு ரூ.8600, பட்டாணி பருப்பு ரூ.5700 என்ற அடிப்படையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.