districts

img

முன்னாள் அதிமுக நிர்வாகி மீது மோசடி- கொலை மிரட்டல் வழக்கு

விருதுநகர், மார்ச் 30- நிலம் வாங்கித் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அதிமுக நிர்வாகி மீது குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். வெம்பக்கோட்டை அருகே உள்ள தாயில்பட்டியை சேர்ந்தவர் தெய்வேந்திரன் (44). இவர் சாத்தூ ரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், இராமுதேவன்பட்டியை சேர்ந்த நல்லதம்பி (55) என்பவர் தனது மனைவியின் பெயரில் உள்ள நிலத்தை விற்பதாக தெரிவித்தார். எனவே, அந்த நிலத்தை வாங்குவதற்கு முன்பணமாக ரூ.1 லட்சத்து 15 ஆயிரத்தை நல்ல தம்பியிடம் கொடுத்தேன். பின்பு, விசாரித்த போது, நல்லதம்பி ஏற்க னவே அந்த நிலத்தை மற்றொரு நப ருக்கு விற்றது தெரியவந்தது. எனவே, முன்பணத்தை திரும்ப கேட்டேன்.  ஆனால், நல்லதம்பி, பணத்தை கொடுக்க மறுத்ததோடு கொலை மிரட்டலும் விடுத்தார். இதற்கு உடந்தையாக கோட்டை யூரை சேர்ந்த தங்கதுரை (42) என்ப வரும் இருந்தார். எனவே இருவர் மீதும் நடவடிக்கை எடுத்து பணத்தை மீட்க வேண்டும் என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதி மன்றம், சம்பந்தப்பட்ட நபர்கள் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க உத்தரவிட்டது. அதன்பேரில் நல்ல தம்பி, தங்கதுரை ஆகியோர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.