districts

img

விருதுநகரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்த 8 பேர் கைது

விருதுநகரில் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ  எடுத்து மிரட்டிய எட்டு பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 
விருதுநகரில் பால் பண்ணை அதிபர் ஹரிஹரன் 22 வயது பெண்ணை காதலிப்பது போல் நடித்து பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்தார். பின்னர் அந்த வீடியோவை நண்பர்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த வீடியோவை காட்டி இளம் பெண்ணை மிரட்டி மேலும் 7 பேர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 
இந்த விவகாரத்தில் பெண்ணின் புகாரில் அடிப்படையில் பால்பண்ணை அதிபர் ஹரிஹரன்,  பிரவீன், ஜீனத் அகமது, மாடசாமி மற்றும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் மீது பாலியல்வன்கொடுமை, தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.