districts

img

தியாகிகள் குமார், ஆனந்தன் நினைவு தினம்

மயிலாடுதுறை, ஜூலை 17 - மயிலாடுதுறை மாவட் டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆச்சாள்புரத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ரத்த தான முகாம் புதனன்று நடைபெற்றது

தியாகிகள் குமார், ஆனந்தன் நினைவு தினத் தையொட்டி சங்கத்தின் ஒன்றிய தலைவர் அன்பு  தலைமையில் நடைபெற்ற  முகாமில், ஒன்றியச் செய லாளர் தேவேந்திரன் முன் னிலை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினரும், புளியந் துறை ஊராட்சி மன்ற தலைவருமான ஏ.நேதாஜி வரவேற்றார்.

கொள்ளிடம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் வி.  ஜெயபிரகாஷ் ரத்த தான  முகாமை துவக்கி வைத்தார்.  முகாமில் 30 யூனிட் ரத்தத்தை வாலிபர் சங்கத்தி னர் தானமாக வழங்கினர்.  சீர்காழி அரசு மருத்துவ மனை ரத்த வங்கி அதி காரி மருத்துவர் விஆர்ஏ. அறிவழகன் கொடையா ளர்களை பாராட்டி சான்றி தழ்களை வழங்கினார்.

திமுக ஒன்றிய செய லாளர் செல்லசேது. ரவிக்குமார், வாலிபர் சங்க  மாவட்டச் செயலாளர் ஏ.அறி வழகன், மாவட்டத் தலை வர் ஐயப்பன், ஆச்சாள்புரம் ஊராட்சி தலைவர் வினோதா கருணாகரன், கற்பள்ளம் ஊராட்சி தலைவர்  சுதா லெனின், ராமகிருஷ்ணா மேல்நிலைப் பள்ளி தலை மையாசிரியர் சோ.அருள ரசன், பட்டதாரி ஆசிரியர் கி. கலைவண்ணன், வாலிபர்  சங்க மாவட்ட துணைத்தலை வர் சுர்ஜித், சீர்காழி ஒன்றியச் செயலாளர் டி.வி.குமார் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் வாழ்த்திப் பேசினர்.