மயிலாடுதுறை. ஜூலை 18- மயிலாடுதுறை மாவட்டம் ,கொள்ளிடம் ஒன்றியம், மாதானம் அருகேயுள்ள ஆலங்காடு ஊராட்சி, ஏகோஜி மகாராஜபுரம் கிராமத்தில் குடியிருக்க இடம் கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் 13 ஆவது நாளாக புதனன்றும் தொடர்ந்து போராட்டம் நடை பெற்றது.
கட்சியின் மாவட்ட செயலாளர் பி.சீனிவாசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டாலின் , எஸ்.துரை ராஜ் ,ப.மாரியப்பன், டி.சிம்சன்,ஜி.வெண்ணிலா, கே. பி. மார்க்ஸ்,கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் கேசவன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் கண்ணகி, வீ.எம்.சரவ ணன், அறிவழகன், எல்.சுந்தரலிங்கம் உள்ளிட்டோர் போராட்டத்தில் கலந்துகொண்டனர்.