பொன்னமராவதி அருகே கண்டியாநத்தம் ஊராட்சி கேசராபட்டி, க.புதுப்பட்டியில் கால்நடைகளுக்கு நோய் பரவாமல் தடுக்கும் வகையில் கால்நடை பராமரிப்பு துறை மூலம் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இம்முகாமில் நோய் வந்த மாடுகளுக்கு ஊசியும் நோய் வராமல் தடுப்பதற்காக நோய் எதிர்ப்பு சக்தி மருந்து, குடற்புழு நீக்க மருந்து வழங்கப்பட்டது. மேலும் ஆடு, கோழி ஆகிய கால்நடைகளுக்கு ஊசி செலுத்தபட்டு மருந்துகள் வழங்கப்பட்டன.