districts

img

விடுதலைப் போராட்ட வீரமங்கை வேலுநாச்சியார் பிறந்தநாள் விழா

சிவகங்கை, ஜன.3- இந்திய விடுதலைப் போராட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் 292 ஆவது பிறந்தநாள் விழா சிவ கங்கையில் மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் பெரிய கருப்பன், சட்டமன்ற உறுப்பி னர்கள் தமிழரசி, மாங்குடி, ஊராட்சி மன்ற தலைவர் மணி முத்து, ஆதிதிராவிடர் நல குழு உறுப்பினர் துரை ஆனந்த், சிவ கங்கை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் செந்தில் குமார், முன்னாள் அமைச்சர் தென்னவன், இளைய மன்னர் மகேஷ் துரை, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலை வர் மஞ்சுளா பாலசந்தர், சூரக் குளம் ஊராட்சி மன்ற தலைவர் மலைச்சாமி, வாணியங்குடி ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் எல். பாண்டி, உதவி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் விஜயகுமார் ஆகியோர் செய்திருந்தனர்.