தேனி, ஜூன் 19- பாஜக ஒன்றிய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித் தும், தமிழக அரசு மக்கள் நலன் சார்ந்த திட்டங்களை செயல்படுத்த வலியுறுத்தியும் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி சார்பில் க.மயிலா டும்பாறை ஒன்றியத்தில் இருசக்கர வாகன பிரச்சாரம் நடைபெற்றது. கண்டமனூர், கடமலைக் கண்டு, மயிலாடும்பாறை, வருச நாடு, குமணன் தொழு உள்ளிட்ட இடங்களில் பிரச்சாரம் நடைபெற் றது. கட்சியின் ஒன்றியச் செயலா ளர் போஸ் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராமச் சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் டி.வெங்கடேசன், ஜி.எம்.நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர் என்.முத்துரத்தினம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். போடி ரங்கநாதபுரத்தில் துவங்கிய பிரச்சாரத்திற்கு போடி தாலுகா செயலாளர் சி.முனீஸ்வ ரன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.ராமச்சந்திரன் பிரச்சாரத்தை தொடங்கி வைத்தார். மூத்த தலைவர் கே.ராஜப்பன், விவ சாய தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் எஸ்.கே.பாண்டியன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் கே.செல்வ ராஜ், எஸ்.செல்வம், சுதா உள்ளிட்ட தலைவர்கள் கலந்து கொண்டனர். மேலச்சொக்கநாதபுரம், தர்மத்துப் பட்டி, சிலமலை, சில்லமரத்துப் பட்டி, சூலப்புரம் உள்ளிட்ட கிராமங்க ளில் பிரச்சாரம் நடைபெற்றது. பெரியகுளம் தாலுகாவில் இருசக்கர வாகன பிரச்சார இயக்கம் தாலுகாச் செயலாளர் எம்.வி.முருகன் தலைமையில் நடைபெற்றது. இப்பிரச்சார இயக்கத்தை மாவட்டக் குழு செயலாளர் எம்.ராமச்சந்திரன் துவக்கி வைத்தார். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சு. வெண் மணி, மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மதன்குமார் உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்து கொண்டனர். பிரச்சார பயணம் லட்சுமிபுரம், கைலாசபட்டி, கள்ளிப்பட்டி, தாமரைக்குளம், வடுகபட்டி, மேல்மங்கலம், ஜி. கல்லுப்பட்டி, கெங்குவார்பட்டி, தேவதானப்பட்டி, எருமலை நாயக்கன்பட்டி வழியாக ஜெயமங்க லத்தில் பொதுக்கூட்டத்துடன் நிறைவு பெற்றது. சின்னமனூர் ஒன்றியத்தில் எரசக்கநாயக்கனூர் கிராமத்தில் துவங்கிய இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு மாவட்டக்குழு உறுப்பினர் சஞ்சீவிக்குமார் தலைமை வகித்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.எம்.நாக ராஜன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.எஸ்.ஆறுமுகம் நிறைவு செய்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கே. கரண்குமார், விதொச மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர்.
மதுரை
மதுரை மாநகரில் மத்திய -1ஆம் பகுதி சார்பில் வியாழ னன்று ஞானஒளிவுபுரம் ஏ.ஏ. ரோட்டில் உள்ள மாக்சிம் கார்க்கி படிப்பகம் அருகில் கிளைச் செய லாளர் பழனிவேல் தலைமையில் பிரச்சாரம் துவங்கியது. மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.பாலா துவக்கி வைத்தார். மாவட்டச் செய லாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் அ.ரமேஷ், போக்குவரத்து இடைக்கட்டி செய லாளர் எஸ்.அழகர்சாமி, பகுதிச் செயலாளர் ஏ.பாண்டி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் வை.ஜென்னி யம்மாள் எம்.சி., பி.கோபிநாத் உள்ளிட்டு பலர் கலந்து கொண்ட னர். மாலை புதுஜெயில் ரோடு, முரட்டன் பத்ரி அருகில் இருந்து பிரச்சார பயணம் நடைபெற்றது. மேற்கு - 2ஆம் பகுதிகுழு சார்பில் ஜீவா நகர் பகுதியில் இருந்து கிளைச் செயலாளர் பாண்டியராஜன் தலைமையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு பிரச்சாரத்தை தீக்கதிர் மேலா ளர் ஜோ.ராஜ் மோகன் துவக்கி வைத்தார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.பாலசுப்பிரமணி யம், பகுதிச் செயலாளர் ஏ.எஸ்.செந்தில் குமார், மாவட்டக் குழு உறுப்பினர்கள் மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், பாத்திமா, வெண்ணிலா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மத்தி 2 பகுதிக்குழு சார்பில் புதனன்று மாவட்டக் குழு உறுப்பி னர் பி.ஜீவா தலைமையில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்க நடைபய ணம் துவங்கியது. மாநிலகுழு உறுப்பினர் எஸ்.பாலா துவக்கி வைத்தார். மாவட்டச் செயலாளர் மா.கணேசன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் அ.ரமேஷ், அ. கோவிந்தராஜ், பகுதிச் செயலாளர் பி.கோபிநாத், ஜெனரல் கமிட்டி செயலாளர் எஸ்.சந்தியாகு உள்பட பலர் கலந்து கொண்டனர். விருதுநகர் அருப்புக்கோட்டையில் மக்கள் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடைபெற்றது. பாவடித் தோப்பு முதல் திருநகரம் வரை நடைபெற்ற பிரச்சாரத்திற்கு சிஐடியு கன்வீனர் பி.அன்புச்செல்வன் தலைமை தாங்கினார். துவக்கி வைத்து நகர் செயலாளர் எம்.பரமதயாளன் பேசினார். மத்தியக் குழு உறுப்பி னர் கே.பாலபாரதி சிறப்புரை யாற்றினார். கோரிக்கைகளை விளக்கி மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.முத்துக்குமார், வி.முரு கன், மாவட்டக்குழு உறுப்பினர் எம். தாமஸ் ஆகியோர் பேசினர். ஒன்றி யச் செயலாளர் எம்.கணேசன், மூத்த தோழர் எஸ்.காத்தமுத்து, நகர்மன்ற உறுப்பினர் பாலசுப்பிர மணியன் உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.
பழனி
பழனியில் நகர்குழு உறுப்பி னர்கள் சிவகுமார், ஷெரிப் ஆகி யோர் தலைமை வகித்தனர். ஆர். சச்சிதானந்தம் எம்.பி. சிறப்புரை யாற்றினார். முன்னாள் நகர்மன்ற தலைவர் வ.ராஜமாணிக்கம், நகரச் செயலாளர் கே.கந்தசாமி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராம சாமி, கமலக்கண்ணன் மற்றும் மனோகரன், கோபி, தனலட்சுமி, மாரிகண்ணு, அன்னலட்சுமி, செந்தில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.