districts

img

தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு மரியாதை

விருதுநகர், ஜூலை 18- தமிழ்நாடு  என பெயரிடப்பட்டு துவக்க  விழாவை முன்னிட்டு தியாகி  சங்கரலிங்க னார் சிலைக்கு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு  என பெயர் மாற்றம் செய்ய கோரி  விருது நகரைச் சேர்ந்த தியாகி சங்கரலிங்கனார் 76 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து உயிர் நீத்தார்.அவரின் கோரிக்கையை ஏற்று1967 ஜூலை 18 இல் அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா  சட்டப்பேரைவையில் தீர்மானம் நிறைவேற்றி, தமிழ்நாடு என அறிவித்தார். தற்போது,ஜூலை 18 தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு கொண்டாடப்பட்டு வருகிறது.   இந்தநிலையில், விருதுநகரில் தியாகி சங்கரலிங்கனார் சிலைக்கு  அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி,  பள்ளி மாணவ மாணவியரின் பேரணியை துவக்கி வைத்தார். பின்பு, செய்தியாளர்களுக்கு பேட்டி யளித்த அவர் கூறுகையில்,பேரறிஞர் அண்ணா, சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு என பெயர் வைத்த நாள் இந்நாள்.  இந்த நாளை தமிழ்நாடு நாள் என கொண்டாட வேண்டுமென முதல்வர் ஸ்டா லின் உத்தரவிட்டுள்ளார்.   இது நம் விருதுநகருக்கு மிகப்பெரிய பெருமையாகும். தமிழ்நாடு என பெயர் வர மூலகர்த்தாவாக இருந்தவர் தியாகி சங்கர லிங்கனார் ஆவார். தமிழ்நாடு என்று சொல்லும்போது ஒரு உணர்வு வருகிறது. அந்த உணர்வோடு இந்நாளை அனைவரும் கொண்டாட வேண்டும் என தெரிவித்தார்.